தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!
தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 19 ஆண்டுகளாக நீண்டு வருகிறது. இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று பேரணி நடத்தினர்.
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து:
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக அளிக்கப்பட்டு வந்தது. அரசு ஊழியர் உயிரிழந்த பிறகும்கூட, அவரது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு தான் வந்தது. இதனால் அதிகமானோர் பயன்பெற்றனர். இதனிடையே, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ம் முதல் அமல்படுத்தப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது.
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.62,000 வரை ஊதியம்!
அதனால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆட்சிப் பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே அதற்கான அறிவிப்புகள் வராத நிலையில் தமிழக அரசு அது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பேரணி நடத்தினர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் முத்துசாமி மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கல்ஸ் பேசினர். மேலும் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பேரணியில் பங்கேற்றனர். மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இலட்சக்கணக்கான கையெழுத்துகளைத் திரட்டி, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். எனவே அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.