தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? அரசு சங்கம் சார்பில் போராட்டம்!
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இது குறித்த விபரங்களை காண்போம்.
ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பின் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அரசு ஊழியர் உயிரிழந்தோர் ஆண் அல்லது பெண் இருந்தாலும் அவரது கணவர் அல்லது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஏராளமானோர் ஊழியர்கள் பயன் பெற்று வந்தனர். அதுமட்டுமின்றி, பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஏராளமான சலுகைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட பல நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
பின்னர் தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2003ஆம் காங்கிரஸ் அரசு அமல்படுத்தியது. புதிய ஓய்வூதிய திட்டமானது, ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை பிடித்தம் செய்யப்பட்டு, பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் எந்த விதமான சலுகைகளும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லாத காரணத்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யுமாறு அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் (நாளை) ஜூன் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட பால்ராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை குறிப்பாக, சத்துணவு ஊழியர்களுக்கு தகுந்த சம்பளம் வழங்க வேண்டும் என்றும், சாலைப் பணியாளர்களின் 41 மாத சம்பளத்தை குறிப்பிட்ட மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் எனவும் ஏஜென்சீஸ் மூலம் அரசு பணிகளுக்கு ஆட்களை சேர்க்க வேண்டாம் என்று பல கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு சங்க மாவட்ட செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.