தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? விரைவில் அறிவிப்பு வெளியாகுமா?
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்கும் காரணத்தால் தற்போது இந்த திட்டம் அமலுக்கு வராது என்ற நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தது அரசு ஊழியர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழ்நாட்டை பொறுத்த வகையில் பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய சர்ச்சை சமீப காலங்களில் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. சில மாநிலங்கள் இத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியதே இதற்குக் காரணமாகும். ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேச அரசுகளைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் திமுகவின் தேர்தல் வாக்கு உறுதிகளில் ஒன்றாக இதுவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அரசு ஊழியர்கள் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியம் வரும் படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது.
Exams Daily Mobile App Download
ஆனால் கடந்த 2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வைத்து வருகின்றனர். மேலும் இதற்கு தமிழகத்தில் உள்ள பல கட்சி தலைவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
Airtel, Jio ஹாட்ஸ்டார் இலவச பிளானுடன் வரும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரங்கள் இதோ!
இந்த நிலையில் தற்போது சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் முன்னிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார். அவர் கூறியதை கேள்வி பட்ட அரசு ஊழியர்கள் மிகவும் கொதித்து போய் ஆத்திரத்தில் இருந்து வருகின்றனர். மேலும், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் விஜயபாலன் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகிறோம். விரைவில் ஜாக்டோ ஜியோ கூடி மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தவிருக்கிறது என விஜயபாலன் தெரிவித்துள்ளார்.