தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் தற்போது தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் காரைக்குடியில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. மேலும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா காரணமாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் ஒவ்வொன்றாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் பெண் அரசு ஊழியர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஆண் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அவர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கடந்த 2004ம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியது. இதற்கு ஆரம்ப கால கட்டத்தில் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்தது.

இந்த வங்கி கணக்கு தொடங்கினால் ரூ.2 லட்சம் வரை காப்பீடு – ஜன் தன் அக்கவுண்ட் அம்சங்கள்!

அத்துடன் அரசு ஊழியர்களும் மற்றும் ஆசிரியர்களும் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து காரைக்குடியில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அத்துடன் சிவகங்கை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!