தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?
தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் உள்ள அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் முன்னதாக ஜாக்டோ ஜியோ அமைப்புடன் இணைந்து ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது அரசு தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் அவர்கள் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வில் விலக்கு – அரசுக்கு கோரிக்கை!
அதில் முக்கிய கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
அதில், கொரோனா பாதித்த மக்களுக்கு ஆசிரியர்கள் வட்டார அளவில் சென்று நிவாரணம் வழங்குவது. நடுநிலை பள்ளிகளை உயர்நிலையாக தரம் உயர்த்துவதற்கான கருத்துக்களை தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு, உரிய அறிக்கை பெற்று அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும், ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களை உரிய இடத்தில் பணிஅமர்த்த வேண்டும். மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Kena thanama news podathenga