தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து - அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து - அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – அரசுக்கு கோரிக்கை!

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய ரத்து செய்தல், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் உள்ளிட்ட பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து அனைத்து அரசு ஊழியர்களும் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. வாக்குறுதி அளித்ததை போல உடனடியாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – உதயநிதி ஸ்டாலினை கேள்வி கேட்ட மக்கள்!

இந்த நிலையில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி கடந்த மாதம் 1ம் தேதி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

TCS நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் பணிவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி துரை ஆட்சியர் அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் ஜெய ராஜராஜேஸ்வரன், மாவட்ட செயலாளர் சோலையன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜாக்டோ ஜியோ முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!