PF கணக்குதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடிப்படை ஊதியம் அதிகம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியம்!
இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்களில் 15000 மேல் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவது குறித்து வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
EPFO:
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருங்கால நிதி அமைச்சகத்தில் பிஎப் கணக்கு தொடங்கப்படுகிறது. இதில் மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎப் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பிறகு அவருக்கு வழங்கப்படும். மேலும் பிஎப் கணக்கு தாரர்கள் ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம். இந்த ஓய்வூதிய திட்டத்தில் EPFO அமைப்பு பல புதிய மாற்றங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மீண்டும் அமலாகும் பழைய ஓய்வூதிய திட்டம்!
அந்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் 15,000 மேல் ஊதியம் பெறும் நபர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தற்போது அமைப்புசார் துறைகளின் கீழ் 15000 கீழ் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு ஊதியத்தில் இருந்து 8.33 சதவீதம் தொகை ஓய்வூதியத்திற்கு ஒதுக்கப்படுகிறது. அதே போல 15000 கீழ் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கும் 8.33 சதவீதம் தொகை ஓய்வூதியத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் ஓய்வூதிய பங்களிப்பை அதிகரிக்க கோரி ஓய்வூதியதாரர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.
தமிழகத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
இதனையடுத்து ரூ.15000 க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறுவோருக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்துவது தொடர்பாக வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. மேலும் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிதி அமைப்பின் மத்திய குழு கூட்டம் மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து கலந்தாலோசிக்கப்படும். இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆய்வு குழு தனது அறிக்கையை கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளது.