தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு? விரைவில் அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு? விரைவில் அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு? விரைவில் அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு? விரைவில் அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அத்துடன் மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்காக பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். ஆனால் கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை.

வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து தேர்வு வருகிற ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் TRB மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

தற்போது இவர்களும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, 2013ம் ஆண்டுக்கு முன்பாக அரசு பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் TET தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் இணைந்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான அரசாணை விரைவில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!