தமிழகத்தில் இனி 24 மணிநேரமும் கடைகளை திறக்க அனுமதி – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெருவோரக் கடைகள், வணிக வளாகங்கள் சினிமா திரையரங்கங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் கடை:
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பிறகு தெருவோரக் கடைகள், வணிக நிறுவனங்கள், மசோதாக் கடைகள், சினிமா திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்த மசோதாவை தொடர்ந்து மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்ப இந்த சட்டத்தை மாற்றம் செய்யவோ அல்லது மசோதாவில் உள்ளபடியே நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரையில் தான் 24 மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் திறந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
தமிழக அரசின் அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகள் நடத்த முடியுமா? உண்மை நிலவரம் இதுதான்!
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்படி 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கடைகளில் குறைந்தபட்சமாக 10 ஊழியராவது வேலை பார்க்க வேண்டும். இந்த அனுமதி அடுத்த 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் வேலை பார்க்கும் கடைகளில் உள்ள ஊழியர்களுக்கு வாரத்தில் ஒருநாளாவது விடுமுறை வழங்க வேண்டும் எனவும், இந்த ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கூடுதல் நேரத்தையும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 10.30 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது எனவும், வாரத்திற்கு ஐந்து மணி நேரம் மட்டுமே ஊழியர்களை வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கு இரவுநேர பணி சம்மதம் என்றால் மட்டுமே அவர்களுக்கு இரவு பணி வழங்க வேண்டும் எனவும், பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.