தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து பள்ளியிலும் மாணவர்கள் தாமதமாக வந்தால் வெளியே நிறுத்தி வைக்கப்படுகின்றனர். இதனால், இதற்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்தாலும் பள்ளிக்கு வெளியே நிறுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு என்னென்ன வசதியை செய்துகொடுக்க வேண்டுமோ அத்தனை வசதிகளையும் அரசு செய்து கொடுத்து வருகிறது. அதாவது, அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உதவித்தொகை, அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடை, புத்தகங்கள், சைக்கிள், மடிக்கணினி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரைக்கும் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அவ்வப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பள்ளிகளின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள நேரு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளியை திடீர் ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வெளியே நின்றிருந்திருக்கின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய வகை ஹைட்ரஜன் பேருந்து – புனேவில் இயக்கம்!
Exams Daily Mobile App Download
அப்போது மாணவர்களிடம் எதற்காக வெளியே நிற்கிறீர்கள் என கேட்டபோது பள்ளிக்கு தாமதமாக வந்ததாலும், அதனால் பள்ளிக்கு வெளியே நிற்பதாகவும் கூறியிருக்கின்றனர். இதனை கேட்ட அமைச்சர் தலைமையாசிரியரிடம் மாணவர்கள் தாமதமாக பள்ளிக்கு வந்தாலும் பள்ளிக்கு வெளியே நிற்க வைக்க வேண்டாம் எனவும், பள்ளிக்கு உள்ளே காத்திருக்க வைக்கலாம் எனவும் அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்