ரயில்களில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கான புதிய சலுகை – புதிய அறிவிப்பு!

0
ரயில்களில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கான புதிய சலுகை - புதிய அறிவிப்பு!
ரயில்களில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கான புதிய சலுகை - புதிய அறிவிப்பு!
ரயில்களில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கான புதிய சலுகை – புதிய அறிவிப்பு!

இந்திய ரயில்வேத்துறை, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் சில சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மூத்த குடிமக்களுக்கான சலுகையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூத்த குடிமக்கள்:

இந்தியாவில் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு தற்போது ரயில்வே சேவை இயல்பு நிலைக்கு வந்துள்ளது. தற்போது முன் பதிவில்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் பல புதிய திட்டங்களும் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில் பயணிகள் புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் பயணத்தின் போது உள்ள குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். அதனை தொடர்ந்து ரயிலில் உணவு பொருட்கள் வாங்கும் போது பணம் செலுத்த QR கோட் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தகைய திட்டங்களை தொடர்ந்து IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர்கள் தேவை எனில் 24 மணி நேரத்திற்குள் தங்களின் போட்டிங் பாயிண்டை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 70 ஆக உயர்த்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ரயிலில் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 58 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் 50% கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த கொரோனா பேரிடரின் போது ரயில்வே நிர்வாகம் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. அதனால் வருவாய் இழப்பை தடுக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரயில்வே நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 900 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – மாநகராட்சி முடிவு

மேலும் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையால் ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரயில் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை பெறுவதற்கான வயது வரம்பை ஆண் – பெண் இருவருக்கும் 70 ஆக உயர்த்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சலுகை குளிர்சாதன வசதி அல்லாத பெட்டிகளில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!