SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை – கடனுக்கு குறைந்த வட்டி வீதம்!
இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில், 5 லட்ச ரூபாய் இணை-இலவச கடனுக்கு குறைந்த வட்டி வீதம் வசூலிக்கப்படும் என புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வட்டி
சமீபத்தில் SBI வங்கி ‘கவாச் தனிநபர் கடன்’ என்ற பெயரில் புதிய தனிநபர் கடன் திட்டத்தை அறிவித்தது. அதாவது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில் SBI வங்கி அளிக்கும் இணை – இலவச கடன்களின் வாடிக்கையாளர் ஒருவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனவால் பாதிக்கப்பட்டால், அதற்கான சிகிச்சை உள்ளிட்ட செலவுகளை இவை ஈடுசெய்யும் என்று SBI நிர்வாக தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் H1 B விசாவுக்கான கட்டுப்பாடுகள் ரத்து – அரசு அறிவிப்பு!
அதன் படி கவாச் தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் கடன்கள் இணை இல்லாததாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒருவர் எந்தவொரு சொத்தையும் அடகு வைக்க தேவையில்லை. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் 5 வருட காலத்திற்கு ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
மேலும் கடன்களுக்கான குறைந்தபட்ச தொகை ரூ.25,000 ஆகவும், வட்டி ஆண்டுக்கு 8.5% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SBI வங்கியில் கவாச் தனிநபர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாத சம்பளம் பெறுபவர்கள், பெறாதவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட நபர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும் SBI வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கி போர்டல் மூலம் இத்திட்டத்தின் கீழ் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். SBI யின் இந்த புதிய திட்டத்தின் கீழ் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.