தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – புதிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள பதிவு வரும் 27 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் பதிவு
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் சீனா நாட்டை தொடர்ந்து உலக நாடுகளில் பரவ தொடங்கியது. ஆனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை கற்று வந்தனர். அதன்படி, கொரோனா படிப்படியாக குறைந்த நிலையில் மட்டுமே மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களை நடத்தப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, மாணவர்களுக்கு மே 5ம் தேதி பொது தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதப்பட்டது. அதன்பின்னர், வரும் 23ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட உள்ளனர். மாணவர்களுக்கு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் உண்மைத்தன்மையை விரைவாக அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்படும் என்றும், தேர்வு துறை அறிவித்திருந்தது.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி எப்போது? முழு விவரம்!
அதனைத்தொடர்ந்து, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள பதிவு வரும் ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 15ம் தேதி முடிவடையும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.உயர்கல்வித்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.