EPFO நிதியை கணக்கிட புதிய வழிமுறை – முழு விவரம் இதோ!
வருங்கால வைப்பு நிதி தொகையை கணக்கிட எளிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சேமிப்பு முறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
EPF திட்டம்:
வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்திற்கு பிறகு கிடைக்க கூடிய ஒரு நல்ல சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்பு தொகையானது தனிநபரின் வருமானத்தில் இருந்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைப்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தனிநபரும் தங்களது ஓய்வு காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ உதவியாக உள்ளது. மேலும் இந்த வருங்கால வைப்பு நிதி திட்டம் 20 நபருக்கு மேல் கொண்ட அனைத்து நிறுவனங்களும் செயல்படுத்த முடியும்.
Common Wealth 2022: பந்து உருட்டுதலில் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!
மேலும் இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களின் நெருக்கடி நிலைகள், தவிர்க்க முடியாத விபத்துகள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு பெரிதும் உதவியாக இந்த வருங்கால வைப்பு நிதி உள்ளது. அதுமட்டுமின்றி ஊழியர்கள் இறப்பிற்கு பின் சேமிக்கப்பட்ட தொகை அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நடுத்தர மக்கள் தங்களது அவசியமான தேவைகளை பூர்த்தி செய்ய உதவியாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தில் பயன் பெற்று வரும் ஊழியர்களுக்கு சில எளிய வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது இந்த வகையான சேமிப்பு கணக்குகளில் ஊழியர் மற்றும் முதலாளி இருவரின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி 24 சதவீத (12+12) பங்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்தின் மூலம் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாக வழங்குகிறது. தற்போது அரசு 8.5% வட்டியை வழங்கி வருகிறது. ஒவ்வொரு பணியாளரின் அடிப்படை சம்பளம் + டிஏவி ல் 12% இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வட்டியானது ஒவ்வொரு ஆண்டும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும் கூட்டு வட்டி காரணமாக இரட்டிப்பு பலனும் கிடைக்கிறது. பிஎஃப் கணக்கில் இருந்து ஓய்வூதிய நிதிக்கு செல்லும் தொகைக்கு வட்டி கணக்கிடபடுவதில்லை என்பதை ஊழியர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.