ரயிலில் முன்பதிவு டிக்கெட் பரிசோதனைக்கு புதிய முறை அறிமுகம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!
ரயில் பயணிகள் தங்கள் முன்பதிவு நிலையை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிலும், இந்த புதிய முறை முதன் முறையாக மதுரை ரயில்வே கோட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
டிக்கெட் பரிசோதனை:
ரயிலில் பயணிகள் நீண்ட தூர பயணத்திற்கு தங்களது இருக்கைகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட இடத்தை முன்பதிவு செய்து பயனடைந்து வருகிறார்கள். தற்போது டிக்கெட் முன்பதிவிற்கு பல்வேறு எளிய முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அது சமயம், பயணத்தின் போது டிக்கெட் பரிசோதனைக்கு என்று நியமிக்கப்பட்டுள்ள பரிசோதகர், இறுதி செய்யப்பட்ட பயனர்களின் அச்சிடப்பட்ட பட்டியலை வைத்து டிக்கெட்டுகளை சோதனை செய்வார்.
Exams Daily Mobile App Download
ஆனால், தற்போது அந்த செயல்முறையை எளிதாகும் வகையில் தெற்கு ரயில்வே வாரியம் ஒரு ப்யத்திய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி டிக்கெட் பரிசோதனைக்கு என்று தனியாக கையடக்க கணினிகள் பயன்படுத்தப்படும். இந்த கையடக்க கணினிகள் முதன்முறையாக மதுரை ரயிலேவ் கோட்டத்தில் தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக, அங்குள்ள டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வரும் ஆபரண தங்க விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அதன்படி, முதல்கட்டமாக தேஜஸ் விரைவு ரயில் மற்றும் பாண்டியன் விரைவு ரயில்களில் இந்த புதிய பயணச் சீட்டு சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம்,பயணசீட்டுகளை எளிதாக, சோதிக்க என்பதால் பரிசோதகர்களின் செயல் திறன் அதிகரிக்கும், மேலும் காலியாக உள்ள இடங்களை உடனடியாக இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம், அடுத்தடுத்த நிறுத்தங்களில் வரும் பயணிகள் அந்த இடங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.