தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புது உறுப்பினர் சேர்ப்பது கட்டாயம்!
தமிழகத்தில் முக்கிய ஆவணமான ரேஷன் அட்டைகள் வைத்திருப்போருக்கு முக்கிய விதிமுறைகளை அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குடும்பத்தில் புதிதாக உறுப்பினர் ஒருவர் சேர்ந்தால் கண்டிப்பாக அவரது பெயரை ரேஷன் அட்டையில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுகள்:
மக்களுக்கு அரசின் பல நலத்திட்டங்கள் ரேஷன் அட்டைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. மலிவு விலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதாக இருக்கிறது. மேலும் அரசின் நலத்திட்டங்களை பெற தேவைப்படும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருக்கிறது.
மதுரையில் நாளை (ஜூன் 7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
அதன் படி ரேஷன் கார்டுகளுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் பதிவு செய்து பொருள்கள் வழங்கப்படுகின்றன. அதனால் ரேஷன் அட்டையில் ஒரு சில மாற்றங்களை செய்வது அவசியமாகும். அந்த வகையில் குடும்பத்தில் புதிதாக உறுப்பினர் ஒருவர் சேர்ந்தால் அவர்களின் பெயர்களை ரேஷன் அட்டைகளில் சேர்க்க வேண்டும். ஒரு பெண் திருமணம் முடிந்து வந்தால் அவர் பெற்றோர் வீட்டின் ரேஷன் அட்டையில் இருந்து முதலில் பெயரை நீக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
அதன் பின் ஆதாரில் முகவரியை அப்டேட் செய்ய வேண்டும். பின் ஆதாரில் கணவர் பெயரை சேர்க்க வேண்டும். பின் ரேஷன் அட்டையில் உங்களது பெயரை ஆன்லைன் மூலமாக சேர்த்துக் கொள்ளலாம். அல்லது உங்களது குடும்பத்தில் புதிதாக குழந்தை பிறந்தால் அவரது பெயரை சேர்க்க குழந்தைக்கு ஆதார் எடுக்க வேண்டும். குழந்தையின் பிறப்பு சான்றிதழை வைத்து ஆதார் எடுக்கலாம். அதன் பின் ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்க்காமல் இருந்தால் அரசின் பல நலத்திட்டங்களை பெற முடியாமல் போய்விடும்.