தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!
கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் விரைவில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்லூரி:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மறுபுறம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடையும் வகையில் அவர்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தற்போது நீட் தேர்வை சிறப்பாக எழுதுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் விரைவில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் நியமனம் – மத்திய அமைச்சர் தகவல்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதற்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு நம் மாநில முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளர். கடந்த ஆண்டு வரை மருத்துவக் கல்லூரியில் மாணவர் எண்ணிக்கை 150 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 50 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது 11 மருத்துவக் கல்லூரிகளில் 1450 மாணவர்களை சேர்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியிட்டுள்ளார்.