தமிழகத்தை தாக்கும் புதிய ஆபத்து – எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!

0
தமிழகத்தை தாக்கும் புதிய ஆபத்து - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!
தமிழகத்தை தாக்கும் புதிய ஆபத்து - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!
தமிழகத்தை தாக்கும் புதிய ஆபத்து – எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அதன்காரணமாக மழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

எச்சரிக்கை:

தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை எதுவும் பதிவாகாத நிலையில், ஜனவரி 27ஆம் தேதியான இன்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதிதாக உருவாகி உள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது அடுத்து வரும் மூன்று நாட்களில் மேற்கு – வட மேற்கு திசைகளில் நகர இருக்கிறது.

பட்ஜெட்டில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு என்ன? A முதல் Z வரை! முழு விவரம் உள்ளே!!

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களில் இயல்பான வெப்பநிலையை விட குறைந்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலோர மாவட்ட மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் அறிவுறுத்தப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!