தென்கிழக்கு வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை!
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 10 நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை இரவு பகலாக கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி பொது மக்களை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த வாரம் தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்தது. குறிப்பாக மயிலாடுத்துறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிவு இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி உடல் நலம் பற்றிய கவலை வேண்டாம்.. Google-இன் புதிய Health Connect செயலி அறிமுகம்!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் வரும் 16ம் தேதி அதாவது நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும்19-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் 3-ம் சுற்று 20-ம் தேதிக்கு பிறகு தொடங்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.