2023ம் ஆண்டில் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் தான்.. கொட்டி கிடைக்கும் வேலை வாய்ப்புகள் – விவரம் உள்ளே!
வரும் 2023ம் ஆண்டில் வங்கிகள் மற்றும் எஃப்எம்சிஜி, பிஎஃப்எஸ்ஐ போன்ற நிறுவனங்கள் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
நடப்பு ஆண்டில் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் கொரோனா கால கட்டத்தில் ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் நோக்கில் நிர்வாக முறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மனித வளத்தை மேம்படுத்த திட்டமிட்டு புதிய கூடுதல் பணியாளர்களை நியமித்தது. குறிப்பாக கல்லூரிகளில் படித்து முடித்து வெளியேறிய அனுபவமில்லாத நபர்களுக்கு வாய்ப்பளித்து.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த முயற்சியால் தற்போது ஏராளமானவர்கள் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது 2022ம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் வங்கிகள் மற்றும் எஃப்எம்சிஜி, பிஎஃப்எஸ்ஐ போன்ற நிறுவனங்கள் வரவிருக்கும் 2023 ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியர்த்தவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 28 விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி!
Exams Daily Mobile App Download
அதன்படி ஆக்சிஸ் வங்கி 9000 புதிய பணியாளர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. அடுத்தாக பிரபல தனியார் வங்கியான HDFC 3500 பேரை புதிதாக பணியமர்த்த முடிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து Deutsche Bank Group நிறுவனம் நடப்பு ஆண்டில் மட்டும் புதிய பணி நியமனங்களை 40-50% அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு 800-க்கும் மேற்பட்டோர்களை பணியமர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.