TNPSC அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு – ரூ.71,900 வரை ஊதியம்! முழு விவரம் இதோ!
தமிழக இந்து அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் TNPSC குரூப் 2 ,2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்வின் முடிவை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். அடுத்த கட்ட முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் ஜூலை மாதம் 24ம் தேதி குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அலுவலர் நிலை – III பதவிகளில் 42 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 10,12 மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட் புக் எப்போது? பெற்றோர்கள் கோரிக்கை!
அதன் தொடர்ச்சியாக தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள Executive Officer Grade IV பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்துள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ம் வகுப்பு அல்லது ITI, Diploma கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,500 – ரூ.71,900 ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.