TNPSC அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு – 2 லட்சம் வரை ஊதியம்! முழு விவரங்கள் இதோ!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கணக்கு அதிகாரி பதவியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் அனைத்து பணியிடங்களுக்கும் போட்டித்தேர்வுகளை நடத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் VAO, துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப் 1 முதல் குரூப் 4 வரையுள்ள போட்டித்தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டில் இதுவரை குரூப் 2 மற்றும் 2A தேர்வு நடத்தப்பட்டிருக்கும் நிலையில் இம்மாதம் 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கணக்கு அதிகாரி பதவியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை TNPSC தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 13.08.2022 என்ற தேதிக்குள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு 18.08.2022 முதல் 20.08.2022 வரைக்கும் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான தேர்வு அக்டோபர் மாதம் 8ம் தேதியன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விண்ணப்பத்திற்கான பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
NDDB நிறுவனத்தில் காத்திருக்கும் Deputy Manager பணியிடம் – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்த பதிவு, விண்ணப்பித்த நாள் முதற்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது, கணக்கு அதிகாரி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் சேவை துறையின் மூலம் ரூ.56,900 முதல் ரூ.2,09,200 வரை ஊதியம் அளிக்கப்பட இருக்கிறது. மேலும், TNPSC கணக்கு அதிகாரி பதவிக்கான வயது வரம்புகளை பொறுத்து SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs பிரிவுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
How to apply to this job ??