TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!
பிரபல TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பினை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு பகுதியில் இருக்கும் நிறைய பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர். அதனால் பல்வேறு குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல நிறுவனங்கள் அவர்கள் கம்பெனியில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தற்போது TCS (Tata Consulltancy Sevices) நிறுவனம் தங்களிடம் காலியாக உள்ள பணிகளை நிரப்பும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தீவிரமெடுக்கும் புதிய வகை கொரோனா – ஊரடங்கு அமலாகுமா?
இந்த அறிவிப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் Drools Technical Architech பணிக்கான பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு கல்வித்தகுதிகளாக அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலையில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நவம்.1ம் தேதியன்று பள்ளிகள் திறப்பு ரத்து – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் interview நடத்தப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள https://www.tcs.com/ என்ற இணையதள முகவரியில் சென்று உங்களது சுயவிபரங்களை பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்வதற்கான கடைசி நாள் அக்.29 ஆகும். இன்னும் சில தினங்களில் கால அவகாசம் முடிய உள்ளது. அதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.