தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் – கூடுதல் தலைமை செயலாளர் அறிவிப்பு!!
தமிழகத்தின் முக்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை காவல் ஆணையராக சங்கர் ஜிவால் தவிர மூன்று அதிகாரிகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள்
தமிழகத்தில் நேற்று (மே 7) சட்டப்பேரவை ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன் படி தமிழகத்தில் முதன்மை கட்சியாக இருந்து வரும் திமுக ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு நேற்று காலை கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. தவிர தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, பல அதிரடியான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – இன்று முதல் அமல் !!
இதை தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றி வந்த மூவர் தற்போது பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்று (மே 7) இரவு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி கோவை மாநகர காவல் ஆணையராக பணியில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உளவுத்துறை ஏடிஜிபியாகவும், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வாலுக்கு பதிலாக, ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியில் இருந்த ஜெயந்த் முரளி பணி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக பி.தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்