இனி இணைய வழியில் தேசிய ஓய்வூதிய சேமிப்பு திட்டம் – அஞ்சலகத்தில் புதிய அறிமுகம்!
இந்தியாவில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என் பி எஸ்) தபால்துறை மூலமாக சேர விரும்புபவர்கள் தற்போது இணைய வழியிலேயே கணக்கைத் துவங்கலாம் என்றும் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி முதல் இந்த இணையவழி என் பி எஸ் திட்டத்தை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது.
தபால் நிலையம்:
இந்தியாவில் உள்ள போஸ்ட் ஆபீஸ் மட்டுமல்ல எந்த ஒரு சேமிப்பு திட்டத்திலும், முதலீடு திட்டத்திலும் பணத்தை போடுவது வட்டிக்காக தான். அந்த வட்டி முறையாக கிடைத்தால் தான் போட்ட பணத்துக்கு லாபம். இல்லையென்றால் முதலீடு நஷ்டத்தில் தான் முடியும். அதனால் தான் பெரும்பாலான மக்கள், ரிஸ்க் இல்லாத முதலீடு என கருதப்படும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய அதிகம் விரும்புகின்றனர். இந்த வங்கியில் மட்டும் தான் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பது இல்லை. இந்நிலையில் தற்போது ஏப்ரல் 26 ஆம் தேதியில் இருந்து போஸ்ட் ஆபீஸில் புதிய விதிமுறைகள் செயல்பட இருப்பதாக இந்திய அஞ்சல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்த ஒரு தொகுப்பை இங்கு காண்போம்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில், இந்த திட்டத்தில் இணைய வழியில் சேரும் வசதியை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக தபால்துறை சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அது என்னவென்றால், இணைய வழியில் என் பி எஸ் திட்டத்தில் சேரும் வசதியை கடந்த 26-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் நேரடியாக தபால் நிலையங்களுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் இந்த இணையவழி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, 18 முதல் 70 வயது வரை உடைய இந்திய குடிமக்கள், இந்திய தபால்துறை வலைதளம் மூலமாக இந்த வசதியைப் பெற முடியும். என் பி எஸ்க்கான புதிய பதிவு, தொடக்க மற்றும் மாதப் பங்களிப்பு, ஒவ்வொரு மாதமும் பணம் பிடித்தம் செய்ய வேண்டிய தேதி ஆகிய அனைத்து நடைமுறைகளையும் மிக குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளா்கள் இணைய வழியிலேயே மேற்கொள்ள முடியும் என்றும் தபால்துறை தெரிவித்து உள்ளது.