தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய முயற்சி – அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க மற்றும் அதன் உபயோகத்தை குறைக்க முதல்வர் மஞ்சப்பை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். மேலும், முதல்வரின் பெரிய முயற்சியை பாராட்டி அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு:
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் நேற்றில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பின்னோக்கி ஓடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Exams Daily Mobile App Download
அதாவது, பழையதை மறந்துவிடக் கூடாது என்பதற்காக தான் இத்தகைய பின்னோக்கி ஓடும் நிகழ்ச்சியை நடத்தியதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், பிளாஸ்டிக் எந்த அளவுக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது எனவும், மற்ற உயிரினங்களுக்கும் எந்த அளவு அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதனை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக்கை தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மஞ்சப்பை திட்டத்தை கொண்டுவந்தார்.
TNPESU பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
மேலும், பெரும்பாலான பொதுமக்கள் மார்டன் என்ற பெயரில் பழைய கலாச்சாரத்தையே மாற்றி வருகின்றனர். இதனால் பெரிய அளவில் சுகாதார சீர்கேடும் பல நோய்களும் பரவுவதற்கு காரணமாகிவிடுகிறது. முன்பெல்லாம் வீட்டின் முன்பு சாணி தெளித்து அரிசி மாவில் கோலம் போடுவது வழக்கம். ஆனால், தற்போது சாணி பவுடர் வாங்கி வைத்துக் கொண்டு அதை தெளிக்கின்றனர். மேலும், பழைய கலாச்சாரத்தை மறந்துவிடாமல் அதனை பின்பற்றும்படி அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.