விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த வெண்பா இவர் தானா? ரசிகர்கள் அதிர்ச்சி!
சமீபகாலமாக ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா சீரியலை விட்டு விலகுவதாக வெளியான செய்திகள் அதிகளவில் பேசப்பட்டு வரும் நிலையில் அந்த கதாப்பாத்திரத்தில் விஜே மணிமேகலை அல்லது அனிதா சம்பத் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவி சீரியல்களின் வில்லி என்றாலே உடனடியாக எல்லாருக்கும் நியாபகம் வருவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் வெண்பா முகம் தான். ஏனென்றால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினாவின் நடிப்பு அப்படி. அதாவது பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியும், கண்ணம்மாவும் பிரிவதற்கு ஒரு முக்கிய காரணம் இந்த வெண்பா தான். இந்த விஷயம் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை யாருமே அறிந்திராத ஒன்று.
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவிற்கு வந்த நறுக் கமெண்ட் – இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியீடு!
வழக்கமாக வெண்பா செய்யும் பல வில்லத்தனங்கள் அவ்வப்போது நகைச்சுவையாக மாறிவிடும். ஆனால் பாரதியை திருமணம் செய்து கொள்ள போடும் பிளான்களில் வெண்பா உருப்படியாக செய்தது இருவரையும் பிரித்து மட்டும் தான். இருந்தாலும் தான் நினைத்ததை அடைய துடிக்கும் வெண்பா கதாப்பாத்திரம் ஒரு சிறந்த வில்லிக்கேற்ற நடிப்பாக ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த வெண்பா கதாப்பாத்திரம் மட்டும் இல்லையென்றால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இத்தனை ஸ்வாரஸ்யமும், விறுவிறுப்பும் இருந்திருக்காது.
இந்த வெண்பா ரோலில் நடித்து வரும் நடிகை பரினா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தொடர முடியாத சூழல் உருவாகி இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் வெண்பாவை சுற்றியே சில முக்கியமான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் பரினா விலகும் சமயத்தில் அவருக்கு பதிலாக விஜே மணிமேகலை அல்லது அனிதா சம்பத் அந்த ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் 3வது வாரத்தில் வெளியேற இருக்கும் போட்டியாளர் இவர்தான் – வாக்கு பட்டியல் வெளியீடு!
இவர்கள் இருவரில் பரினா போன்ற வில்லத்தனத்தை காட்டுவதற்கு அனிதா சம்பத் மட்டுமே சரியான தேர்வாக இருப்பார் என்றும் வலைதளங்களில் சில கருத்துக்கள் உலா வருகிறது. இதன் உண்மை நிலவரம் எதுவும் தெரியாத பட்சத்தில் வெண்பா கதாப்பாத்திரத்தில் தொடர்ந்து பரினாவே நடிப்பாரா அல்லது வேறு யாரேனும் வருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.