“வானத்தை போல” சீரியலில் புது சின்ராசாக களமிறங்கிய ஜீ தமிழ் பிரபலம் – ரசிகர்கள் உற்சாகம்!
தமிழில் முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “வானத்தை போல” சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகுமார் களமிறங்கி இருக்கிறார். இது தொடர்பாக வெளியான படப்பிடிப்பு தல புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
வானத்தை போல:
சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் பல சீரியல்கள் TRPயில் போட்டி போடுகின்றனர். அண்ணன் தங்கை, அக்கா தம்பி பாசம் என கதை கொண்ட சீரியல்கள் என்றால் ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்ட சீரியல் தான் “வானத்தை போல” சீரியல். இந்த சீரியலில் அண்ணன் சின்ராசு கதாபாத்திரத்தில் நடிகர் தமன் குமார் நடித்து வந்தார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநயின் முதல் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
மேலும் அவரின் தங்கையாக துளசி கதாபாத்திரத்தில் நடிகை ஸ்வேதா நடித்து வந்தார். இந்நிலையில் ஸ்வேதா திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த தமனும் விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அதனால் இந்த இரண்டு முக்கிய கதாபாத்திரத்திலும் வேறு ஒரு நடிகை, நடிகர் களமிறங்கி உள்ளனர். அதன் படி துளசி கதாபாத்திரத்தில் மன்யா ஆனந்த் என்ற புதுமுக நடிகை களமிறங்கி இருக்கிறார்.
அதே போல அண்ணன் சின்ராசு கதாபாத்திரத்தில் ஜீ தமிழ் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்து மக்களிடம் பிரபலமான நடிகர் ஸ்ரீகுமார் களமிறங்கி இருக்கிறார். இதனால் இந்த சீரியல் மீண்டும் சூடு பிடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இது குறித்து ஸ்ரீகுமார் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்று வெளியாகி உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.