கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி பெற புதிய கேஷ்டேக் – தமிழக அரசு அசத்தல்!!
தமிழகத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்காக ஒரு புது ட்விட்டர் கணக்கு மற்றும் கேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கொரோனா நோயளிகள் தங்களுக்கு என்று படுக்கை வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. ஒரு நாளைக்கு மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்து விடுகிறது. அதே போல் பலி எண்ணிக்கை 100 என்ற கணக்கில் தான் இருந்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இப்படியாக இருக்க, கொரோனா நோயாளிகள் பலரும் அத்தியாவசிய தேவையான படுக்கை மற்றும் இதர வசதிகள் கூட இல்லாமல் கவலை அடைந்து வருகின்றனர்.
WORK FROM HOME முறையில் 1 பில்லியன் டாலர் சேமித்த Google நிறுவனம் – ஆய்வில் தகவல்!!
அதே போல் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்து வருகின்றது. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு சார்பில் 104 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது தேவையான வசதிகளை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
இப்படியான சுழலில் தான், தற்போது படுக்கை வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக ஒரு ட்விட்டர் கணக்கு துவங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இதற்காக ஒரு கேஷ்டேக் கூட உருவாக்கப்பட்டுள்ளதாம். இதன் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.