தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய நடைமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு தற்போதைய அரசு அனைத்து துறைகளிலும் பாரபட்சம் பார்க்காமல் நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பணி ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதை எளிமைப்படுத்தி தமிழ்நாடு அரசு கடிதம் வெளியிட்டுள்ளது. இது குறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
புதிய நடைமுறைகள்:
சிசிஎஸ் பென்சன் 1972 விதி 54(11)ன் படி, கணவன் – மனைவி இருவரும் ஓய்வூதிய விதிகளின் கீழ் இருந்தால், இருவரும் இறந்த பிறகு அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் குடும்ப பென்சன் கிடைக்கும். இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உறுப்பினர்களில் ஒருவர் இறந்தால், மற்ற உறுப்பினருக்கு (கணவன் அல்லது மனைவி) குடும்ப பென்சன் வழங்கப்படும். மேலும் ஓய்வுக்குப் பின் இருவரும் இறந்து விட்டால், குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டசபையில் கடந்த 7ம் தேதி, நிதித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – ரயில்வே துறையின் சூப்பரான அறிவிப்பு!
அப்போது தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை, குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதில் அதிக கால தாமதமும், நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக உள்ளதாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை எளிமைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இனி வரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் கணவன்/மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். எனவே, குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் அவர்கள் கணவன்/மனைவியின் இறப்பு சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தால் போதும்.
Exams Daily Mobile App Download
நடப்பு ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது பயன்பாட்டில் உள்ள கூடுதலான விவரங்களை கோரும் படிவம் 14க்கு பதிலாக குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு எளிதான படிவம் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் பேசி இருந்தார். இந்நிலையில் அதை உறுதி செய்யும் விதமாக பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு எளிமையாக மாற்றியுள்ளது. குடும்ப ஓய்வூதியமாக மாற்ற கணவன்-மனைவி இறப்பு சான்றிதழை மட்டுமே சமர்ப்பித்தால் போதுமானது என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்யும் முறையில், அதிக காலம் சிக்கல் உள்ளதால், அதை மாற்றி அமைக்க தமிழக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.