நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு 60 – 100 கிமீ.,க்குள் வேகம் நிர்ணயம் – ஐகோர்ட் உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம் விபத்து தொடர்பான வழக்கு ஒன்றிற்கு விசாரணை நடத்துகையில் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகத்தை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
சாலைகளில் கவனக்குறைவினால் ஏற்படும் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை அவர்களின் இழப்பை பொறுத்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் மருத்துவ செலவுகள் மற்றும் வாழ்வாதாரம் ஆகிய தேவைகள் சீரமைக்கப்படும். அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் மருத்துவர் விபத்தினால் 90% பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக விபத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீட்டு தொகையாக 18,43,908 ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
Amazon நிறுவனத்தில் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – டெலிவரி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!
ஆனால் இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் 2021ம் ஆண்டு மேல்முறையீட்டு வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அதற்கு, நீதிபதி கிருபாகரன் அவர்கள் அந்த பெண்ணுக்கு 1,49,80,548 ரூபாயாக இழப்பீடை உயர்த்தி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கின் தீர்ப்பில் எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிமீ வேகத்திலும் நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிமீ வேகத்திலும் வாகனங்களை இயக்கலாம் என்று மத்திய அரசு 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
Covaxin தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – செப்டம்பர் இறுதிக்குள் ஒப்புதல்!
இது தொடர்பான விசாரணை இன்று மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பதில் அளித்தது. அதன்படி, சாலை மேம்பாட்டையும் இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தான் வேகம் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த கருத்தை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து, மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு அறிவித்த வேக கட்டுப்பாட்டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசு முன்னதாக 2014ம் ஆண்டு அறிவித்துள்ள 60 – 100 கிமீ வேகத்தை நிர்ணயித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.