கடன் செயலிகளுக்கான புதிய வழிமுறைகள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வகுத்து வழங்கி வருகிறது. இதையடுத்து தற்போது கடன் வழங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கான புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடன் செயலி
இந்தியாவில் கடன் செயலிகள் மூலமாக தற்போது பெரும்பாலானோர் கடன் பெற்று வருகின்றனர். இதையடுத்து இதில் பல்வேறு குற்றசாட்டுகள் பெறப்பட்டுள்ளது. அதாவது, கடன் செயலிகள் மூலமாக ஆன்லைன் வழியில் கடன் பெறும் போது அதிக வட்டியை விதிக்கின்றனர். அத்துடன் பெரிய பங்கை கட்டணம் என்ற பெயரில் வசூலிப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் கடன் தொகையை செலுத்தவில்லையெனில் கடன் பெற்றவர்களை மிகவும் துன்புறுத்தி வருகின்றனர். அதனால் தற்போது ஆன்லைன் கடன் ஆப்களை ஒழுங்குபடுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.
விரைவில் முடிவிற்கு வர இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்! ப்ரோமோ ரிலீஸ்!
மேலும் இது தொடர்பாக இவர் தெரிவித்துள்ளதாவது, ஆன்லைன் கடன் ஆப்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டவையாக உள்ளதா என்று சரிபார்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து மேலும் ஒரு புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டிஜிட்டல் கடன் வழங்குநருக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வங்கிகள் போன்ற ஒழுங்குமுறைக்குட்ப்பட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் வாங்கியவர் இந்த கட்டணங்களைச் செலுத்த தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் கடன் பெறுபவரின் ஒப்புதலின்றி கடன் வரம்பை அதிகரிக்க தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடன் பெற்றவர்கள் அசல் மற்றும் புரொபோஷனேட் வட்டியை அபராதமின்றி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இதற்கென கூலிங் ஆப் காலம் கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கடன் செயலிகளுக்கான புகார்களைத் தீர்ப்பதற்கு நோடல் குறை தீர்க்கும் அதிகாரி இருப்பதை வங்கிகள் அல்லது நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.