நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்கள்! பொதுமக்கள் அச்சம்!
உலக நாடுகளில் கொரோனாவின் மாற்றம் அடைந்துள்ள வைரஸ் ஆன ஓமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
உலக நாடுகளை கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா என்ற நோய் பரவல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் கடுமையான ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலங்களில் ஏற்படும் சூழலை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து வந்தது. தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கொரோனா பரவல் குறைந்து இருந்தது. ஆனால், மக்களை மேலும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த வைரஸான ஓமைக்ரான் பரவ ஆரம்பித்துள்ளது.
பத்தே நிமிடத்தில் ஆன்லைன் வாயிலாக PAN கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இதனால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. கூடுதலாக, இந்த கொரோனா பரவல் 3ம் அலையின் பாதிப்பாக கூட இருக்கலாம் என்று உலக நாடுகள் அச்சம் அடைந்து வருகிறது. இதனால் அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதோடு, வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றபடுகிறதா என்று அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் – டிச.18, 19 மதுரையில் மாநாடு!
மேலும் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, இரவு நேர ஊரடங்கு, மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துதல், கூட்டம், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை குறைத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிக்கலாம். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என் மொத்தம் 27 மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அம்மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார செயலாளர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.