அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஆந்திர மாநில அரசின் புதிய உத்திரவாத ஓய்வூதிய திட்டம் !
ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் அரசு ஊழியர்கள் அனைத்து பலன்களையும் பெறலாம் என்று கூறப்படுகிறது.
ஓய்வூதிய திட்டம்:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் அதிரடியாக உயரும் சொத்துக்களின் விலை – அதிருப்தியில் சாமானிய மக்கள்!!
இதனை சுட்டிக்காட்டி மற்ற மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது என்பது இயலாத ஒன்று என மாநில அரசுகள் தெரிவிக்கிறது. இது குறித்து பேசிய மத்திய ரிசர்வ் வங்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் வரும் நாட்களில் நாடு பொருளாதார ரீதியாக எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு மத்தியில் ஆந்திர பிரதேச மாநில அரசு “உத்திரவாத ஓய்வூதிய திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பழைய மற்றும் புதிய ஓய்வு திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து பலன்களை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் ஊழியர்கள் தனது சம்பளத்தில் 14 சதவீதத்தை டெபாசிட் செய்து 40% ஓய்வூதியமாக பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.