இந்தியாவின் கடற்படைக்கு புதிய கொடி – பிரதமர் மோடி பெருமிதம்!
இந்தியாவின் கடற்படைக்கான கொடியில் அடிமைத்தனம் நீக்கப்பட்டு புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கொடியை முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்துள்ளார்.
புதிய கொடி அறிமுகம்
உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான (IAC-1) ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்காக அர்பணித்துள்ளார். மேலும், காலனித்துவ கடந்த காலத்தை முற்றிலும் அகற்றும் விதமாக புதிய கடற்படைக் கொடியையும் இன்று கொச்சியில் வெளியிட்டுள்ளார். அதாவது, இத்தனை வருடங்களும் இந்திய கடற்படை கொடியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் இருந்தது. தற்போது முழுமையாக அந்த அடிமைத்தனத்தை நீக்கும் வகையில் இந்த புதிய கடற்படை கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு – வலுக்கும் கோரிக்கை!
அதாவது, இந்த புதிய கொடியில் நாட்டின் தேசியக் கொடி, அசோக சின்னம் மற்றும் நங்கூரம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த வெள்ளைக்கொடியில் கடற்படையின் மோட்டோவும் தேவநாகிரி மொழியில் இடம் பெற்றுருக்கிறது. அதில் உள்ள எண்கோண வடிவிலான சின்னம் எட்டு திசைகளையும் சுட்டிக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய சின்னத்தை சுற்றியுள்ள தங்கக்கரை, உறுதியான தன்மையை குறிக்கிறது. மேலும், கடந்த 1950 ஆம் ஆண்டில் இருந்து மட்டுமே தற்போது வரைக்கும் கடற்படை கொடி 4-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்காக அர்ப்பணித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, உலக அரங்கில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலமாகவே மிகப்பெரிய விமானம் தாங்கிய போர்க்கப்பலை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது என கூறியுள்ளார். மேலும், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நாடு முழுவதும் மிக பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அறிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்திற்காக பணியாற்றிய கப்பற்படை ஊழியர்களையும் பாராட்டியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்