Instagram பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!
இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இனி வரும் நாட்களில், டெஸ்க்டாப்பில் இருந்து போஸ்ட்களை பதிவேற்றும் அம்சம் வர உள்ளதாக அந்த நிறுவன வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பதிவு:
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் அதிகமாக தகவல்களை சமூக ஊடகங்கள் மூலமாக தான் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு செயலியாக இருப்பது இன்ஸ்டாகிராம் தான். இந்த செயலியினை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. ஒரு நபர் வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் அக்கவுண்டுகள் இரண்டும் இணைக்கப்பட்டது. அதே போல் பல வித புதிய அம்சங்கள் சமீப நாட்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – கமிஷனர் சுற்றறிக்கை!
கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கணினியில் இருந்து நேரடியாக மெசேஜ் செய்ய கூடிய வசதியினை அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாக பலரும் கணினியில் இருந்து தங்களது இன்ஸ்டாகிராம் கணக்கினை பயன்படுத்துகின்றனர். இதனை அடுத்து இந்த வசதியினை மேம்படுத்த கணினியில் இருந்து பயனர்கள் போஸ்ட்களை பதிவேற்றும் வசதியினை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை அனைத்து விதமான சமூக ஊடக ஆலோசகர்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர். டிக்டாக் மற்றும் யூடியூப் ஆகிய செயலிகளுக்கு இந்த அம்சம் சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர். மொபைலில் இருப்பது போலவே கணினியில் பயன்படுத்தும் போது புகைப்படத்தினை எடிட் செய்து கொள்ளலாம் என்றும் கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.