வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!
உலகின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தற்போது காப்பகப்படுத்தப்பட்ட அரட்டைகள் (Archived Chats) புதிய உரைக்கு பிறகு மறையக் கூடிய செயல்பாடுகளை பெற்றுக்கொள்ளலாம்.
புதிய அம்சம்
வாட்ஸ்அப் செயலி பயனர்களுக்கான காப்பகப்படுத்தப்பட்ட அரட்டைகளை உருவாக்கி வருகிறது. இது வாட்ஸ் அப் பயனர்களுக்கு அனுப்பப்படும் சில முக்கியமான செய்திகளில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தகவல் தொடர்புகளுக்கான முக்கிய சாதனமாக விளங்கும் வாட்ஸ்அப் செயலில் உலகளவில் பல கோடி கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த செயலி பயனர்களை ஈர்க்கும் விதத்தில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது காப்பகப்படுத்தப்பட்ட அரட்டைகளுக்கான புதிய அமைப்புகளை உருவாகியுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 640 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இன்று (ஜூலை 28) முதல் நடைமுறைக்கு வரும் இப்புதிய அம்சமானது, பயனர்களது இன்பாக்ஸில் கூடுதல் கட்டுப்பாட்டையும், காப்பகப்படுத்தப்பட்ட அரட்டைகளுக்கான (Archived Chats) கோப்புறையை உருவாக்க கூடுதல் வழிகளை வழங்குகிறது. இது தொடர்பான வாட்ஸ் அப் நிறுவனத்தின் அறிக்கையின்படி, ‘வாட்ஸ்அப் பயனர்களுக்கு சேட்டில் ஒரு புதிய செய்தி வரும்போது, சேட் பகுதியில் இருந்து திரும்பிச் செல்வதற்குப் பதிலாக, காப்பகப்படுத்தப்பட்ட செய்தி செயல்பாடுகள் மூலம் தகவலை பெற்றுக்கொள்ளலாம். வாட்ஸ் அப்பில் உள்ள செய்தி காப்பகம் உங்கள் தனிப்பட்ட செய்திகளை ஒழுங்கமைக்கவும், முக்கியமான உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் உங்களை அனுமதிக்கிறது.
TN Job “FB Group” Join Now
அதன் மூலம் வாட்ஸ் அப் செயலி பயனர்களுக்கு ஒரு தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான இடத்தை தருவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். அதன்படி உங்களுக்கு நெருங்கிய நபர்களிடம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பேசிக்கொள்ள முடியும்’ என குறிப்பிட்டுள்ளது. சில ஆண்டுகளாக காப்பகப்படுத்தப்பட்ட அரட்டை அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனம் சோதித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில், இந்த அம்சம் பீட்டா பதிப்பில் காணப்பட்டது. ஆனால் இவை பின்னர் நிறுத்தப்பட்டு கடந்த ஆண்டு மீண்டும் வெளிவந்தது. அதன் பின்னர் வாட்ஸ் அப் செயலி பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பிறகு இந்த சேவையை மேம்படுத்த முயற்சித்து வருகிறது.