IRCTC இணையதளத்தில் புதிய அம்சம் அறிமுகம் – ரயில் பயணிகளுக்கான அசத்தல் அறிவிப்பு!
இப்போது ரயில் பயணங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, பயணிகள் ரயில்களில் இருக்கும் காலியிடங்கள் குறித்த விவரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் IRCTC இணையதளத்தில் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அம்சம்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் அதிகம் விருப்பப்படும் ஒரு பயணம் ரயில் போக்குவரத்து தான். ஏனென்றால் குறைந்த விலையில் விரும்பும் இடங்களுக்கு சென்றடைய முடிவதால் இந்த ரயில் பயணங்கள் பயணிகள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது. மேலும், இந்த ரயில் பயணங்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதால் இதனை பலரும் தேர்வு செய்கின்றனர். ஆனால், ரயில் பயணங்களை மேற்கொள்வதில் இருக்கும் ஒரே ஒரு சிரமம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது தான்.
Exams Daily Mobile App Download
அதாவது, கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதால் திட்டமிடப்பட்ட தேதிகளில் தங்களது பயணங்களை தொடர விரும்பும் பலரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கின்றனர். இதனால் அவசரமாக பயணங்களை மேற்கொள்பவர்கள் டிக்கெட் கிடைக்காமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த சிரமங்களை தவிர்க்கும் விதமாகவும், டிக்கெட்டுகளை சரியான நேரங்களில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் IRCTC ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
RRB குரூப் D தேர்வுக்கு தயாராவோருக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி வெளியீடு!
அதாவது, IRCTC இணையதளத்தில் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, எல்லா ரயில்களிலும் இருக்கைகள் இருப்பதை காணும் அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இருக்கை காலியாக இருக்கும் விவரங்களை தெரிந்து கொண்டு உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இல்லையெனில் காத்திருப்பு டிக்கெட்டை எடுக்க முடியும். இப்போது காத்திருப்பு டிக்கெட்டுக்கும் பலர் காத்திருந்தால் இந்த அம்சம் மூலம் முன்பதிவு செய்வதை தவிர்க்கலாம். இதற்கு முன்னதாக ரயிலில் எந்த இருக்கை காலியாக உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் வசதி IRCTCல் இதுவரை கொடுக்கப்படவில்லை. இப்போது IRCTC புஷ் நோட்டிபிகேசன் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம், பயணிகள் இருக்கை வசதி உள்ளிட்ட பல வகையான வசதிகள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக பயணிகள் IRCTC இணையதளத்தில் புஷ் நோட்டிபிகேசன் ஆப்ஷனை எனேபிள் செய்ய வேண்டும். அப்படி செய்தால் ரயிலில் இருக்கும் காலியிட விவரங்கள் தோன்றும். அதை வைத்து பயணிகள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ள முடியும். அதே போல ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் யாரேனும் டிக்கெட்டை ரத்து செய்தால் இது குறித்த அறிவிப்பும் மொபைல் போனில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.