ஒரே நேரத்தில் 4 சாதனங்களை இணைக்கும் வாட்ஸ்அப்-ன் புதிய அம்சம் – என்னென்ன ஸ்பெஷல்!
வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள அடிக்கடி புதிய அம்சங்களை செயலியில் அறிமுகம் செய்து வரும் நிலையில், ஒரே நேரத்தில் பல சாதனங்களை இணைக்கும் அம்சம் பற்றி தெரிந்து கொள்வோம்.
வாட்ஸ்அப் அப்டேட்:
வாட்ஸ்அப்பில் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் செயலி முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமல்லாமல் KaiOS அம்சம் கொண்ட சாதனங்களிலும் வழங்கப்படுகிறது.
தமிழக ஊர்க்காவல் படை தேர்வு மற்றும் பணிகள் – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
வாட்ஸ்அப் பல வகையான பதிப்புகளை கொண்டுள்ளது. பயனர்கள் தங்களுக்கு தேவையான பதிப்பை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது, வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் இணைக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்திற்கு மல்டி-டிவைஸ் பீட்டா என்று பெயர். இதன் மூலம் டெஸ்க்டாப் மற்றும் போர்ட்டலில் நமது கணக்கை அணுக முடியும். மேலும், பீட்டா பயனர்கள் 4 சாதனங்களில் தங்களது கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்கு பதிலாக மற்றொரு மொபைலில் இந்த வசதியை அணுக முடியாது. இணைக்கப்பட்ட சாதனங்களில் ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களை பயன்படுத்த முடியாது.
Wipro நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – பதவி, சம்பளம், தகுதி, விண்ணப்ப முறை விளக்கம்!
வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் மற்றும் மற்ற சாதனங்களில் லொகேஷன் அறிவது, சாட்களை இணைத்தல், பார்ப்பது போன்ற அம்சங்கள் பயன்படுத்த முடிவதில்லை. ஆனால் நமது கணக்கு இருக்கும் மொபைலில் இணைய வசதி இல்லாத போதும் கூட இணைக்கப்பட்ட சாதனங்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும். இருப்பினும், முக்கிய சாதனம் 14 நாட்களுக்கு மேல் இணைக்கப்படவில்லை என்றால், இணைக்கப்பட்ட சாதனங்கள் தானாகவே இணைப்பை துண்டித்து விடும். வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்கள் தங்கள் வணிக பெயர் அல்லது லேபிள்களை வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பில் இருந்து திருத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.