தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கான புதிய வசதி – அரசின் முடிவு!
தமிழகம் முழுவதும் இணைய சேவைகளின் பயன்பாடு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தமிழக ரேஷன் கடைகளிலும் கூடிய விரைவில் வைஃபை வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரேஷன் கடை:
உலகின் மூலைமுடுக்கெங்கும் இணைய சேவை வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக கிராமங்களில் கூட இணைய சேவைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், நகர்ப்புறங்களில் இணைய சேவைகள் வேகமாக கிடைப்பது போல கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் கிடைப்பதில்லை. இதனால், கிராமப்புறங்களிலும், மலைப்பிரதேங்களிலும் அதி வேகமான இணைய சேவையை வைஃபை மூலமாக கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வைஃபை வசதியை கொண்டு வரலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதாவது, தமிழகத்தில் மட்டுமே கிட்டதட்ட 35,323 ரேஷன் கடைகள் இருக்கிறது. இந்த ரேஷன் கடைகளில் 10,279 ரேஷன் கடைகள் பகுதிநேர கடையாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த கடைகளில் சில ரேஷன் கடைகள் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த கடைகள் அனைத்திலும் வைஃபை வசதியை கொண்டுவர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த வைஃபை திட்டம் அமல்படுத்தப்பட்டால் ரேஷன் கடைகளை மக்கள் இணைய சேவை மையமாக கூட பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவகங்களுக்கான முக்கிய அறிவிப்பு – இனி ‘இந்த’ வசூல் கூடாது!
இது அரசின் வைஃபை திட்டம் என்பதால் கட்டணமும் மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும், இதன் மூலமாக ரேஷன் கடைகளுக்கும் வருமானம் கிடைக்கும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வைஃபை சேவையை விட 5ஜி சேவைகளை தொடங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 5ஜி சேவைகள் வந்துவிட்டாலும் கூட இன்னும் 4ஜி சேவைகளின் பயன்பாடு தான் அதிக அளவில் இருக்கிறது. இதனால், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் இந்த இணைய சேவைகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.