சென்னை விமான நிலையத்தில் புதிய வசதிகள் அறிமுகம் – அதிகாரிகள் தகவல்!
தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ரன்வேக்களை இயக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு மணி நேரத்தில் 50 விமானங்களை இயக்க முடியும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரன்வே பணிகள்:
தமிழகத்தில் கடந்த 2020, 2021 ம் ஆண்டுகளில் கட்டுக்கடங்காமல் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் மற்ற சேவைகளை தொடர்ந்து விமான சேவையும் பாதிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகளால் தான் தொற்று அதிகம் பரவுகிறது என்று கண்டறியப்பட்டது. இதனால் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் விமான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு அரசு நோய்த் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது. இதனையடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. அதனால் மீண்டும் விமான சேவைகள் துவங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது வழக்கம் போல விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே நேரத்தில் 2 ரன்வேக்களை இயக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரன்வே 3.66 கி.மீ., 2வது ரன்வே 2.89 கி.மீ., இதில் முதல் ரன்வேயில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி புறப்படுகின்றன. 2வது ரன்வேயில் ஏடிஆர் எனும் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகிறது. இங்கு ஒரு மணி நேரத்தில் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு மணி நேரத்தில் 50 விமானங்களை இயக்கும் நோக்கில் 2 ரன்வேக்களையும் மாற்றியமைக்க விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளில் தற்போது நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – மீண்டும் 34 ரயில் சேவைகள் துவக்கம்!
தற்போது சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் பேரில் தான் 2 ரன்வே பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததும், வரும் ஜூலை மாதம் 2வது ரன்வே முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.