திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – என்னென்ன வசதிகள்? முழு விபரம் இதோ!
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் உள்ள உலக புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது இந்த கோவிலில் பக்தர்களுக்கு கிடைக்கும் வசதிகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
திருமலை திருப்பதி
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் உலக புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா காலத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த நேரடி தரிசன டிக்கெட்டு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் தேவஸ்தானம் குறைந்த அளவிலான டிக்கெட்டுகளை மட்டும் இணையதளத்தில் வெளியிட்டது. பக்தர்கள் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்த பிறகே கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.
IPL 2022: சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் ரசிகர்களுக்கு ஷாக் – சைமன் கட்டிச் திடீர் விலகல்!
அத்துடன் கொரோனாவின் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திய பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 48 மணி நேரத்துக்கு முன்பாக மேற்கொண்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் முடிவில் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அமல்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் வழக்கம் போல் நேரடி தரிசன டிக்கெட்டுகளை வழங்க தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கோவிலில் பக்தர்களுக்கு கிடைக்கும் வசதிகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
திருப்பதி கோவிலுக்கு குடும்பத்தினருடன் வரும் பக்தர்களுக்கு வசதிக்காக தங்கும் விடுதிகள் உள்ளன. அத்துடன் இது ரூ.50, ரூ.100, ரூ.1000 போன்ற விலைகளில் கிடைக்கிறது. இதையடுத்து கீழ் திருப்பதியில் உள்ள கோவில்களை குறைந்த கட்டணத்தில் தரிசிக்க முடியும். இங்குள்ள மேல் திருப்பதியில் தேவஸ்தான இலவச உணவு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க பேருந்து மூலமாகவோ அல்லது படி வழியாகவோ பக்தர்கள் நடந்தும் செல்லலாம். அத்துடன் https://tirupatibalaji.ap.gov.in/ என்ற இணையதள முகவரியில் இலவச தரிசன டிக்கெட்டு மற்றும் கட்டண தரிசன டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்.