ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ஒரு மணிநேரத்திற்கு முன்னரே வர உத்தரவு!
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் ஆசிரியர் தேர்வு வரும் 21 மற்றும் 22ம் தேதி நடைபெற இருப்பதால் தேர்வு நடைபெற இருக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அனைத்து தேர்வர்களும் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு:
அனைத்து அரசுப் பள்ளிகளில் காலி இடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றனர். அதே போல இந்த ஆண்டும் ஆசிரியர் தேர்வு மையம் காலியாக உள்ள 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு வரும் மே 21 மற்றும் 22ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் உள்ள 435 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. 1.06 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மையங்களில் ஏற்படும் முறைகேட்டை தடுப்பதற்காக தொடக்க கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் நேற்று உயர் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்வு ஏற்படும் முறைகேட்டை தடுக்கும் வகையில் தேர்வு எழுதப்படும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும், தேர்வுகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், தேர்வு எழுதப்போகும் தேர்வாளர்களை மூன்று முறை பரிசோதித்த பின்னரே தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
முன்பெல்லாம் தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தேர்வு மையத்திற்கு வந்தால் போதும். ஆனால் இந்த ஆண்டு மூன்று கட்ட பரிசோதனை நடைபெற இருப்பதால் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், எம்பிக்கள் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள் போன்றவர்களின் மேற்பார்வையில் தான் விடைத்தாள்கள் கொண்டுவருவது மற்றும் விடைகள் கொண்டு செல்வது என அனைத்தும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.