TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம் & தேர்வு முறை!
தமிழகத்தில் குரூப் 4 & VAO பணியிடத்திற்கான தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையை பற்றி விரிவாக பார்ப்போம்.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அறிவித்தபடி குரூப் 2,2ஏ தேர்வு கடந்த 21ம் தேதி அன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 30 வரை பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு!
இத்தேர்வு மூலமாக சுமார் 7382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் அத்துடன் ஒரே ஒரு படிநிலை கொண்ட தேர்வு என்பதாலும் இத்தேர்வுக்கு 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். இதனை தொடர்ந்து இத்தேர்வு கொள்குறி வகையில் 200 கேள்விகளை கொண்டதாக உள்ளது. இதில் ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படுகிறது.
இதன் முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தற்போது தமிழ் மொழித்தகுதி தேர்வு கட்டாயம் என்பதால் இந்த பகுதியில் 40 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தப்பகுதி பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வு வினாக்களும் கேட்கப்படும்.
தேர்வுக்கு தயாராக சில டிப்ஸ்:
1. தமிழ் மொழிப் பாடப் பகுதியைப் பொறுத்தவரை 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளிப் பாட புத்தகங்களை நன்றாக படித்து கொண்டாலே போதும். இதையடுத்து நேரம் இருந்தால் 11,12ம் வகுப்பு பாட புத்தகங்களை படித்து கொள்ளுங்கள்.
2. பொது அறிவு பகுதிக்கும் 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும்.
Exams Daily Mobile App Download
3. தேர்வாணையம் வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாளில், பொது அறிவு பகுதியில், அறிவியல், அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம் பகுதிகளில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அதனால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.
4. இதற்கு அடுத்ததாக புவியியல், வரலாறு மற்றும் பொருளாதாரம் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
5. நடப்பு நிகழ்வுகளுக்கு தேர்வு அறிவிப்புக்கு முன் ஆறு மாதம் முதல் 1 வருடம் வரையிலான செய்திகளை படித்து கொள்ள வேண்டும்.