நாளுக்கு நாள் மோசமாகும் கோபியின் நிலைமை.. மல்லுகட்டி சண்டை போடும் ராதிகா – “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபிக்கு நிம்மதி வேண்டும் என நினைத்து ராதிகாவை திருமணம் செய்ய, ஆனால் நாளுக்கு நாள் அவருடைய நிலைமை மோசமாகி கொண்டே இருக்கிறது. தற்போது ராதிகா ரேஷன் கார்டில் பெயரை எடுக்க சொல்லி டார்ச்சர் செய்யும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கோபி தன்னுடைய 25 வருட திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லை என நினைத்து, அம்மா, அப்பா, மனைவி, பசங்க என அனைவரையும் விட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். அதனால் அவர் வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக இருக்க போவதாக நினைக்க ஆனால் அங்கே தான் பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. கல்யாணம் முடிந்து சில நாட்களில் ராதிகா ஒரு காபி கூட கோபிக்கு கொடுக்கவில்லை.
Exams Daily Mobile App Download
ஒரு காபிக்காக கோபி தினமும் திண்டாடி வருகிறார். இந்நிலையில் தற்போது கோபியின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கிறது. அதாவது கோபி பெயருக்கு தபால் ஒன்று வர அந்த பெயரில் யாரும் இங்கே இல்லை என சொல்லி ராமமூர்த்தி தபால்காரரை திருப்பி அனுப்புகிறார். அந்த விஷயத்தை தெரிந்து கோபி ராதிகாவிடம் சொல்ல, நாம தனியாக ரேஷன் கார்டு வாங்கி விடுவோம், ஆனால் அதற்கு முன்னதாக அந்த குடும்பத்தில் இருந்து நீங்க ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டும் என சொல்கிறார்.
8 ஆண்டுகளுக்கு பின் சன் டிவி சீரியல் படைக்க போகும் கின்னஸ் சாதனை – ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!
Follow our Instagram for more Latest Updates
உடனே கோபி பாக்கியாவிடம் போன் செய்து ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டும் என சொல்ல, நான் சமையல் ஆர்டர் தான் செய்கிறேன், இது போல வேலை எல்லாம் செய்ய முடியாது என சொல்கிறார். கோபி பாக்கியாவிடம் பேசிவிட்டு போனை வைக்க, உடனே ராதிகா எதற்கு இவ்வளவு நேரம் பேசுறீங்க எனக்கு பிடிக்கவில்லை என சொல்லி சண்டை போட்டு செல்கிறார். கோபிக்கு என்ன செய்வது என தெரியாமல் மாட்டிக் கொண்டது போல முழிக்கிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்களுக்கு இன்னும் கோபி நிலைமை எவ்வளவு மோசமாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.