‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்த பிரபலம் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது புதிய என்ட்ரியாக, கர்ப்பமாக இருந்து வந்த அஞ்சலிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை போல வெளியான எபிசோடுகள் ரசிகர்களை சற்று உற்சாகமாக்கி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
சண்டை, பிரச்சனை, கோர்ட், கேஸ் என பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய திருப்பமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அந்த வகையில் இதுவரை பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகளை மூட்டை கட்டி வைத்திருக்கும் இந்த சீரியலின் இயக்குனர், புதிதாக அஞ்சலி கடத்தப்படுவது, அவரை தேடி செல்வது என கடந்த சில எபிசோடுகளாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களை ஏமாற்றிய ரோஷினி – சரியும் TRP! வினுஷா காப்பாற்றுவாரா?
இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஒருவர் புதிதாக என்ட்ரி கொடுத்து கதையில் இன்னும் கொஞ்சம் ஸ்வாரசியத்தை கூட்ட இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது இந்த சீரியலில் கர்ப்பமாக இருந்து வந்த அஞ்சலிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதன் மூலம் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த கதாப்பாத்திரமாக புதிய குழந்தையின் வரவு பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இத்தொடரில் ஹேமா, லட்சுமி என 2 குழந்தை நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், இவர்களுடன் 3வதாக தற்போது அஞ்சலியின் குழந்தையும் இணைந்துள்ளது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இசைவாணி செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த குழந்தையின் அறிமுகம் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தது. ஏற்கனவே விஜய் டிவியின் சில முக்கியமான தொடர்கள் குழந்தைகளை மையமாக வைத்து நகர்ந்து வரும் நிலையில், தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம் இந்த குழந்தையை மையமாக வைத்து நகரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.