மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு திட்டம் – 2022 மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
நாடு முழுவதும் கடந்த ஆண்டு நிலவிய கொரோனா காலகட்டத்தால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை சரிசெய்யும் விதமாக மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்த திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ள காலம் முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு திட்டம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியதால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இத்தகைய கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்து தவித்தனர். மேலும் பொதுமுடக்கத்தின் காரணாமாக நாடு பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டு நிதி நெருக்கடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், நிதி நெருக்கடியை சரிசெய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியது.
தமிழகத்தில் நாளை (நவ.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அவ்வாறு வழங்கப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம். இந்த திட்டம் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்.1ம் தேதி முதல் கடந்த ஜூன்.30ம் தேதி வரை நியமிக்கப்படும் புதிய ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் புதிய ஊழியர்களின் ஊதிய பங்களிப்பில் 24% PF நிதியில் மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு செலுத்துவதாக கூறியது.
தமிழக அரசு சார்பில் 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் – புதிய திட்டம் துவக்கம்!
இத்திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் முடிந்துள்ள நிலையில் தற்போது அதற்கான காலத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வரும் 2022 மார்ச் 31ம் தேதி வரை இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் PF அமைப்புடன் பதிவு செய்துள்ள நிறுவனத்தில் புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கும், அவர்களை வேலையில் சேர்க்கும் நிறுவனத்திற்கும் சலுகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.