தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் புதிய மின் கட்டணம் அமல்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின்சார கட்டணம் உயர இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் முதல் புதிய மின் கட்டணம் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
புதிய மின் கட்டணம்:
மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக தற்போது மின்சாரம் மாறிவிட்டது. அந்த வகையில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. தமிழக மின்சார துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 12,647 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது. அதன் படி தமிழகத்தின் மின்சார கட்டணம் உயர்த்துவது குறித்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
அதில் 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டு வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.147.50 உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கட்டணம் உயர்வு குறித்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அதன் படி தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் எதிரொலி – WHO எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
மேலும் பேசிய அமைச்சர், தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் முதற்கட்டமாக 100 இடங்களில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் ” சார்ஜிங் பாயிண்ட்” அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அதனை சமாளிக்க 1.45 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்