நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கை அமல் – மத்திய அமைச்சர் ஆலோசனை!!
நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், மத்திய கல்வி அமைச்சர் நாளை (மே 18) ஆலோசனை நடத்த உள்ளார்.
புதிய கல்விக்கொள்கை:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வரும் வகையில் திட்டமிட்ட மத்திய அரசு கடந்த 2020ல் புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தியது.
மே 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!
பல மாற்றங்களை உள்ளடக்கிய புதிய கல்விக்கொள்கை, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் இன்று (மே 17) ஆலோசனை நடத்துவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை (மே 18) ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காணொலி வாயிலாக நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டத்தில், மாணவர்களின் இணையதள வகுப்புகள், கல்விக்கொள்கை குறித்து பேசப்படும் என கூறப்பட்டுள்ளது.