தமிழ் மொழியில் புதிய கல்விக்கொள்கை – மத்திய அரசு வெளியீடு!!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் தமிழ் மொழியிலான புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
புதிய கல்விக்கொள்கை:
இந்தியாவில் கடந்த 34 ஆண்டுகளாக இருந்து வரும் கல்விக்கொள்கையில் சில மாற்றங்களை அறிவித்தது மத்திய அரசு. இதற்காக 21 ஆம் நூற்றாண்டின் புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சகமும் ஒப்புதல் அளித்தது. இந்திய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த கல்விக்கொள்கை ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக 12ஆம் வகுப்பு பொதுதேர்வு மதிப்பெண்கள் மூலம் மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்காது எனவும் அனைவர்க்கும் பொது நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அது மூலமாக தேர்ச்சி வழங்கப்படும் என்பதும், மாணவர்கள் தங்கள் விருப்ப படிப்புகளை விருப்பமான மொழிகளில் கற்றுக்கொள்ளலாம் என்பதும் இதன் சிறப்பம்சமாகும். இந்த புதிய கல்விக்கொள்கை ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட 17 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – அரசு அறிவிப்பு!!
இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது. இந்த தமிழ் மொழி புறக்கணிப்பு தமிழ் ஆர்வலர்களிடையே பலத்த கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் உருவாக்கியது. கல்வி உரிமைகளை பறித்து மக்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் விதத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு இருக்கிறது என மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்நிலையில் புதிய தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் தமிழ் மொழியையும் புகுத்தி மத்திய கல்வி அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.